தமிழ்நாடு செய்திகள்

நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

Published On 2024-11-28 09:24 IST   |   Update On 2024-11-28 09:24:00 IST
  • தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
  • மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ஓரளவிற்கு 66- 75 கி.மீ. வேக காற்றுடன் சுறாவளி புயலாக மாறி நாளை காலைக்குள் வலுப்பெற்ற வாய்ப்புள்ளது.

நேற்று மாலையே ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுப்பெறுவதில் மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News