தமிழ்நாடு செய்திகள்
சுதந்திர தின விழா: கடலூர் விவசாயிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு
- ஆயிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜூக்கு, அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
- சிறப்பு அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக விவசாயி ரங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை:
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம், ஆயிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜூக்கு, அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த இந்த அழைப்பிதழை, கடலூர் தெற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் வடிவேலன் நேரடியாக சென்று வழங்கினார். இந்தச் சிறப்பு அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக விவசாயி ரங்கராஜ் தெரிவித்தார்.