தமிழ்நாடு செய்திகள்

மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2025-04-02 13:46 IST   |   Update On 2025-04-02 13:46:00 IST
  • சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

4-ந்தேதி கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும், 5-ந்தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதியவேளையில் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும். 

Tags:    

Similar News