தமிழ்நாடு செய்திகள்

இந்தி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும்- வெங்கையா நாயுடு கருத்துக்கு அமைச்சர் பதில்

Published On 2024-12-06 15:02 IST   |   Update On 2024-12-06 16:47:00 IST
  • தாய்மொழி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமாக வலியுறுத்தியதே அவர்தான்.
  • தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும்.

இந்தி மொழி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும் என்ற முன்னாள் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கருத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தாய்மொழி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமாக வலியுறுத்தியதே அவர்தான்.

* இந்தியை சார்ந்திருக்கின்ற, வடநாட்டை சார்ந்தவர்கள் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

* நம்முடைய தமிழ்மொழியிலும் இருமொழிக்கொள்கையை பின்பற்றும்போது, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர் சொன்ன கருத்து ஆச்சரியத்திற்குரியதாகவே பார்க்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News