தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் ரவி தேநீர் விருந்து: அதிமுக, பாஜக பங்கேற்பு!

Published On 2025-08-15 18:07 IST   |   Update On 2025-08-15 18:07:00 IST
  • தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.
  • பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

வழக்கப்படி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.

இந்நிலையில் இன்று மாலை தொடங்கிய தீநீர் விருந்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார்.

அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருக்கும் பங்கேற்றனர். 

Tags:    

Similar News