அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்றே த.வெ.க.வுக்கு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி - இ.பி.எஸ்.
- கரூரில் த.வெ.க. தலைவர் பிரசாரத்தை டி.வி.யில் பார்த்தேன். 500 போலீசார் எங்கும் தென்படவில்லை.
- தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்ற இடத்தை த.வெ.க.விற்கு வழங்கி இருக்கலாம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 4 மாவட்டங்களில் ஏற்கனவே விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
* த.வெ.க.வினர் கேட்ட இடத்தையும் அரசு கொடுக்கவில்லை.
* கரூரில் த.வெ.க. தலைவர் பிரசாரத்தை டி.வி.யில் பார்த்தேன். 500 போலீசார் எங்கும் தென்படவில்லை.
* கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு என ஏடிஜிபி கூறுகிறார். முதலமைச்சர் 600 காவலர்கள் என்கிறார்.
* கரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கையில் முரண் உள்ளதால் சந்தேகம் எழுகிறது.
* வேலுச்சாமிபுரத்தில் குறுகிய சாலை என்பதால் பொதுக்கூட்டம் கூடாது என நிராகரித்தார்கள்.
* வேலுச்சாமிபுரத்தை தகுதியற்ற இடம் என நிராகரித்துவிட்டு த.வெ.க.வுக்கு கொடுத்தது ஏன்?
* விஜய் பிரசாரத்திற்கு வேலுசாமிபுரத்தை ஒதுக்கியது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* கரூரில் எனது பிரசாரத்திற்கு அ.தி.மு.க.வினர் கேட்ட இடம் வேறு, கொடுக்கப்பட்ட இடம் வேறு.
* கரூரில் முன்னதாக துணை முதலமைச்சர், முதலமைச்சர் பேசிய இடத்தில் எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
* கரூர் ரவுண்டா பகுதியில் துணை முதலமைச்சர், எம்.பி. கனிமொழி பேசி உள்ளனர். அங்கு விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தராதது ஏன்?
* அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்று தான் த.வெ.க.வுக்கு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.
* தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்ற இடத்தை த.வெ.க.விற்கு வழங்கி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.