முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது - இ.பி.எஸ்.
- பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
- முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம்.
* கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கேள்விகளை எழுப்பிய பின்னர்தான் முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்திருக்க வேண்டும்.
* எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய பின் தான் முதலமைச்சர் அதற்கு பதில் கூற வேண்டும், முன்னதாகவே விளக்கம் அளித்தது ஏன்?
* பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
* முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
* முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது.
* போதிய பாதுகாப்பு தராமல் அரசு அலட்சியமாக இருந்ததால் 41 பேர் பலி.
இவ்வாறு அவர் கூறினார்.