தமிழ்நாடு செய்திகள்
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு
- பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.