தமிழ்நாடு செய்திகள்

'BOOK மட்டும்தான் தூக்கணும்' - இடைநிற்றல் மாணவர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2024-11-29 12:50 IST   |   Update On 2024-11-29 12:50:00 IST
  • கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
  • சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பில் இடைநிற்றலான 5 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் அம்மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் மேற்கொண்ட கள ஆய்வில் இடைநிற்றலுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டு அறிந்தார்.

ஒரு மாணவனின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் மாணவனிடம் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்.

நீயும் லோடுமேன் வேலைக்கு தான் போகணும். லோடுமேன் வேலை எவ்வளவு கஷ்டம். இதெல்லாம் நீ தூக்கக்கூடாது. புக் மட்டும் தான் தூக்கணும். உதவி வேண்டுமானால் கேட்க வேண்டும் என தெரிவித்தார்

அங்கிருந்த சிறுமியிடமும் தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் . சிறுமிக்கு உதவித்தொகை வருகிறதா என்றும் தாயாரிடம் கேட்டறிந்தார்.

கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எதுவும் இல்லாததால் விட்டு விட்டதாக என்று சிறுவனின் தாய் கூறினார்.

என்னம்மா நீங்கள்... கொரோனாவில் இறந்தவர்களின் குழந்தைக்கு உதவித்தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளாரே என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், சிறுவனிடம் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News