தமிழ்நாடு செய்திகள்

சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2025-07-17 16:55 IST   |   Update On 2025-07-17 16:55:00 IST
  • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
  • சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 22-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News