தமிழ்நாடு செய்திகள்

காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2025-05-24 07:30 IST   |   Update On 2025-05-24 07:30:00 IST
  • கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
  • கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு 9 மணியில் இருந்து திடீரென இடி, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News