தமிழ்நாடு செய்திகள்

பரமக்குடி அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

Published On 2025-08-31 07:58 IST   |   Update On 2025-08-31 07:58:00 IST
  • கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
  • விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் தாய் யமுனா, மகள் ரூபினி மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News