தமிழ்நாடு செய்திகள்

கேட்டது 300.. கொடுத்தது 150..! வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

Published On 2025-08-31 19:59 IST   |   Update On 2025-08-31 19:59:00 IST
  • வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
  • கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்கிற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

கடந்தாண்டு திருமணத்தின்போது மணமகன் வீட்டார் 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் தந்ததாகவும், மீதியை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News