தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தவர்கள் உடல்களைக் கண்டு கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On 2025-09-28 01:32 IST   |   Update On 2025-09-28 01:32:00 IST
  • கரூர் துயர சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
  • கூட்ட நெரிசல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.

கரூர்:

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜ மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் சென்றார்.

இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் உடலைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News