பேச்சுவார்த்தையில் உடன்பாடு- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்
- அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு.
கோவையில் அமைச்சர்கள் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதைதொடர்ந்து, நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.