தமிழ்நாடு செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம்: இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2024-12-10 19:32 IST   |   Update On 2024-12-10 19:32:00 IST
  • அ.தி.மு.க.-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என மனு.
  • மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும் வரை அ.தி.மு.க.-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவும், 23-ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் வழக்கு தொடர்ந்து சூர்யமூர்த்தி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News