தமிழ்நாடு செய்திகள்

மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு

Published On 2023-07-29 14:42 IST   |   Update On 2023-07-29 14:42:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி:

ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ். மருத்துவ பிரதிநிதியான இவரது மனைவி ரம்யா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது. 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யா, நேற்று இரவு, மகளின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு, தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி அண்ணனூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் பிறந்தநாள் அன்று தாய் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News