தமிழ்நாடு

விஜய் பட பாணியில் ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்

Published On 2024-04-18 04:09 GMT   |   Update On 2024-04-18 04:32 GMT
  • 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் சங்கர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.
  • ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார்.

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). டிசைனிங் என்ஜினீயராக பணிபுரியும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.

நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளரான அவர் தனது ஒரு ஓட்டை பதிவு செய்வதற்காக, ஜப்பானில் இருந்து கடந்த 11-ந்தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்தவகையில், ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து என்ஜினீயர் சங்கர் கூறியதாவது, 'ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில், நகரேயமா என்ற பகுதியில் வசித்து வரும் என்னிடம், நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தை பார்த்து விட்டு கதாநாயகன் ஒரு ஓட்டு போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்று அந்த பாணியில் தான் இங்கு வருகிறீர்களா? என்று கேட்டதற்கு அந்த படத்தை நான் பார்த்தது இல்லை என்றார். இதற்கு மோடி அரசு தான் காரணம். பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு வாக்கு அளிக்க வந்தேன். அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News