தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

Published On 2022-06-20 03:34 GMT   |   Update On 2022-06-20 03:34 GMT
  • மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
  • ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News