தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீதம்- கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2023-07-22 18:37 GMT   |   Update On 2023-07-22 18:37 GMT
  • வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.
  • தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில், பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News