தமிழ்நாடு செய்திகள்

திருமுடிவாக்கம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து- 21 வீடுகள் எரிந்து சேதம்

Published On 2023-03-06 16:37 IST   |   Update On 2023-03-06 16:37:00 IST
  • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.
  • தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது, 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மக்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News