தமிழ்நாடு செய்திகள்

"விண்ட் சர்பிங்" போட்டியில் முதலிடம் பிடித்த வீராங்கனை ஆசியா போட்டிக்கு தேர்வு

Published On 2023-05-16 15:37 IST   |   Update On 2023-05-16 15:37:00 IST
  • சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.
  • அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.

மாமல்லபுரம்:

சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில் தமிழ்நாடு பாய்மர படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் இணைந்து 4நாட்களாக அகில இந்திய அளவிலான "விண்ட் சர்பிங்" போட்டியை நடத்தி வந்தது.

இதில் சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.

அவருக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கபட்டது. கோவா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட அனைத்து பிரிவு வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News