தமிழ்நாடு

கைத்தறி கண்காட்சி: 23-ந் தேதி வரை நடக்கிறது

Published On 2023-10-19 07:03 GMT   |   Update On 2023-10-19 07:03 GMT
  • கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.
  • கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம்:

மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் காதி மகோற்சவம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி காஞ்சிபுரம், பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதனை எழிலரசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார். கைத்தறி அலு வலர் எம்.நாகராஜன், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காண்காட்சியில் கடலூர், கரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைத்தறி நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரங்குகளில் வைத்திருந்தனர். கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள், கதர்வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தனர். இந்த கைத்தறி கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறஉள்ளது. இது குறித்து சேவைமைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறும்போது, இந்தியா முழுவதும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கண்காட்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் திருச்செங்கோடு, காஞ்சி புரம், திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன என்றார்.

Tags:    

Similar News