தமிழ்நாடு

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2023-10-30 07:38 GMT   |   Update On 2023-10-30 07:38 GMT
  • விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே அதிரடி சோதனை நடத்தினர்.
  • வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

புதுக்கோட்டை:

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர். இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News