தமிழ்நாடு

இயற்கை வேளாண்மை திரும்புவதே நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி- டி.டி.வி.தினகரன் புகழாரம்

Published On 2022-12-30 06:33 GMT   |   Update On 2022-12-30 06:33 GMT
  • இயற்கை விவசாயத்தின் மீது புது நம்பிக்கையை விதைத்திட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுநாள் இன்று.
  • நாம் அனைவரும் இயற்கை வேளாண்மைக்கு திரும்புவதே நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இளைஞர்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மீது புது நம்பிக்கையை விதைத்திட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுநாள் இன்று.

இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், இயற்கை வேளாண்மை, சூழலியல் செயல்பாடுகள் என அவர் முன்னெடுத்த பாதையில், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மைக்கு திரும்புவதே நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News