தமிழ்நாடு

தமிழக சட்டசபை 9-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு

Published On 2023-09-20 08:19 GMT   |   Update On 2023-09-20 11:16 GMT
  • தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார்.
  • சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

சென்னை:

சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது. சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News