தமிழ்நாடு செய்திகள்
டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை- மதுப் பிரியர்கள் வாக்குவாதம்
- கூலிங் பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
- மது பிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், மது பிரியர் ஒருவர் பீர் வாங்க சென்றுள்ளார்.
அப்பொழுது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் 10 ரூபாய் அதிகம் கேட்டதாகவும் அதற்கு கடை ஊழியரிடம் மது பிரியர் கேட்டதற்கு கடைக்கு மின் கட்டணம் எல்லாம் கட்ட வேண்டி உள்ளது. கூலிங் பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அப்படித் தான் விற்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
அது குறித்து மது பிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் கடையினுள் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களை காட்டிலும் வெளியில் இருந்து வரும் தனி நபர்களும் கடையினுள் நின்று வியாபாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. மது பிரியர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.