தமிழ்நாடு

திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டையில் சென்னை நகை வியாபாரியை வெட்டி கொள்ளை- மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

Published On 2023-08-12 07:36 GMT   |   Update On 2023-08-12 07:36 GMT
  • தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர்:

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி சேஷாராம் என்பவரை திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சரவணன், ஆதித்யா என்கிற 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எழிலரசன் என்ற வாலிபர் 3-வதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கண்காட்சி போல் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

Tags:    

Similar News