தமிழ்நாடு

கந்த சஷ்டி திருவிழா: சென்னை- நெல்லை- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்

Published On 2023-11-17 04:40 GMT   |   Update On 2023-11-17 06:29 GMT
  • சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
  • மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது.

சென்னை:

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

இந்த ரெயில் நாளை பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து நாளை (18-ந்தேதி) எண். 06002 சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

இந்த 2 சிறப்பு ரெயில்களும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோனம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது. இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு டாடா நகர் போய் சேருகிறது.

Tags:    

Similar News