தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: சீமான்

Published On 2023-09-27 14:48 IST   |   Update On 2023-09-27 16:23:00 IST
  • நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
  • என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் இதை நான் வரவேற்கிறேன். நாட்டில் சிறந்த பிரதமர் என்றால் அது விபிசிங் தான். அவர் 2 ஆண்டுகள் ஆண்டாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை தந்தார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பா.ஜ.க., காங்கிரசை ஒரே கட்சியாத்தான் பார்க்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உருவ படங்கள் கர்நாடாகவில் எரிக்கப்பட்டது. அதை கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை. ஆதனால் நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News