தமிழ்நாடு

கோப்பு படம்

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேவண்டும்- ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தல்

Published On 2022-07-05 05:00 GMT   |   Update On 2022-07-05 05:00 GMT
  • ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
  • சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

எனவே உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுங்கள் என எச்சரித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படை வீரர்கள், ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு, வலை, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப்பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் எனக்கூறி மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

உயிருக்கு பயந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு கரைக்கு திரும்பினர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையின் இதுபோன்ற செயல்களால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News