தமிழ்நாடு செய்திகள்
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்- பல்லடம் போலீசார் திடீர் கைது
- சம்பவம் தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.