தமிழ்நாடு

கணவரை பிரிந்த பெண்களை மயக்கி வாலிபர் உல்லாசம்- திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தலைமறைவானார்

Published On 2023-01-10 05:42 GMT   |   Update On 2023-01-10 05:42 GMT
  • கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
  • புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

குழித்துறை:

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்து உள்ளனர்.

குழித்துறை பெண் கொடுத்த புகாரில், எனக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ல் கணவரை பிரிந்து விட்டேன். இந்த நிலையில் எனது செல்போனுக்கு வந்த 'மிஸ்டு கால்' அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பழக்கமானார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிய அவர், பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறினார். இதில் நான் மயங்கி அவருடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்ட அவர், 13 பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். என்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது தான் மேல்புறம் வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2-ம் திருமணம் செய்வதாக வாலிபர் கூறியதை நம்பி நெருங்கி பழகியதோடு, நகை-பணத்தையும் இழந்துள்ளார்.

தற்போது திருமணம் செய்ய கேட்ட போது, வாலிபர் மறுத்து மிரட்டல் விடுப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்து உள்ளார். இதே புகாரை மற்றொரு பெண்ணும் தெரிவித்து உள்ளார்.

கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News