தமிழ்நாடு

மணிப்பூர் பிரச்சினை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை- திருச்சி சிவா எம்.பி. பேட்டி

Published On 2023-08-13 06:57 GMT   |   Update On 2023-08-13 06:57 GMT
  • பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார்.
  • மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர்.

இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News