தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் அவதி

Published On 2023-04-19 16:00 IST   |   Update On 2023-04-19 16:00:00 IST
  • ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடம் 116-வார்டில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் சப்ளை இல்லாமல் உள்ளது.
  • கழிவறையில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரசவ வார்டு , நீரிழிவு நோய், சர்க்கரை, ரத்த கொதிப்பு, நரம்பியல் பிரிவு தலை மற்றும் கை கால்கள் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து உயர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ளவர்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடம் 116-வார்டில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் சப்ளை இல்லாமல் உள்ளது. கழிவறையில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அருகில் உள்ள மற்ற வார்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே உள்நோயாளிகள் பிரிவில் சீராக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News