தமிழ்நாடு

நாளை ஆழியார் அணை பூங்கா, டாப்சிலிப் முகாமுக்கு செல்ல மக்களுக்கு அனுமதியில்லை

Published On 2024-04-18 06:41 GMT   |   Update On 2024-04-18 06:41 GMT
  • வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
  • 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணை உள்ளது. இந்த அணையையொட்டி ஆழியார் பூங்கா உள்ளது.

இது கோவையின் சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு, பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து தங்கள் பொழுதை கழித்து செல்வது வாடிக்கையாகும். இதனால் ஆழியார் அணை பூங்காவில் எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ஆழியார் அணையை சுற்றி பார்த்து விட்டு, அவர்கள் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமுக்கும் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக நாளை ஆழியார் அணை பூங்கா மற்றும் பொள்ளாச்சி டாப்சிலிப் முகாம் மூடப்படுகிறது. அங்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News