தமிழ்நாடு
தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்ததில் எண்ணெய் கசிவு- பீதியில் பொதுமக்கள்
- பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சென்னை :
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக நிகழும் எண்ணெய் கசிவு, வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.