தமிழ்நாடு

அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Published On 2022-10-12 06:24 GMT   |   Update On 2022-10-12 06:24 GMT
  • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • தமிழகம் முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர்.

இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த போது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 20-க்கும்மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News