தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2023-08-13 04:19 GMT   |   Update On 2023-08-13 04:19 GMT
  • தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
  • இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வனச்சாலை இரைச்சல் இன்றி இயல்பாக இருப்பதால் வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் திம்பம் 6-வது வளைவில் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து காரை நிறுத்தி உள்ளனர். பின்னர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் சிறுத்தை சிறிது நேரம் நடந்து சென்று பின்னர் சாலையோர தடுப்பு சுவரில் பதுங்கி கொண்டது. காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறும்போது:

தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன. இந்த சமயம் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தங்களது வாகனங்களை விட்டு இறங்கி செல்போன்களில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். சில சமயம் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல் பட வேண்டும். இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News