தமிழ்நாடு செய்திகள்
- அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. மேலும் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் கொடுக்காததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதையடுத்து கடந்த 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால்அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.