தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,503 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-06-02 04:15 GMT   |   Update On 2023-06-02 04:15 GMT
  • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் சுற்று வட்டார பகுதியில் சூறை காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 867 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1503 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.

Tags:    

Similar News