தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக சரிவு

Published On 2023-01-17 09:47 IST   |   Update On 2023-01-17 09:47:00 IST
  • மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,018 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,100 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 110.19 அடியாக இருந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 109.51 அடியானது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News