தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Published On 2023-01-03 09:43 IST   |   Update On 2023-01-03 09:43:00 IST
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
  • நேற்று 118.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 117.81 அடியாக சரிந்தது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 3,942 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,641 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர்திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 118.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 117.81 அடியாக சரிந்தது.

Tags:    

Similar News