தமிழ்நாடு

'டார்ச் லைட்' வேண்டாம் - மன்சூர் அலிகான் கூறிய காரணம் என்ன?

Published On 2024-03-28 08:32 GMT   |   Update On 2024-03-28 10:02 GMT
  • அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
  • மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.

தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.

தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.

முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.

எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.

Tags:    

Similar News