தமிழ்நாடு

புதிய பேருந்து நிலையம் - தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு

Published On 2023-12-30 09:39 GMT   |   Update On 2023-12-30 09:42 GMT
  • நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.
  • நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது:-

புதிய பேருந்து முனையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகள் 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.

ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.


தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வழிவகை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News