தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி 3-ந்தேதி ஊட்டி பயணம்

Published On 2023-06-01 06:47 GMT   |   Update On 2023-06-01 06:47 GMT
  • சென்னையில் இருந்து 3-ந்தேதி புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார்.
  • 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 3-ந்தேதி ஊட்டி செல்கிறார். 1 வாரம் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

சென்னையில் இருந்து 3-ந்தேதி புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். வருகிற 5,6,7 ஆகிய 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். காணொலி வாயிலாக பல்வேறு துணை வேந்தர்கள் இதில் பங்கு பெறுகிறார்கள்.

இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 9-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.

Tags:    

Similar News