தமிழ்நாடு

சட்டசபையில் கடும் அமளி- இபிஎஸ் தரப்பு வெளியேற்றம்

Published On 2022-10-18 05:33 GMT   |   Update On 2022-10-18 05:33 GMT
  • அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து, வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களை பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News