தமிழ்நாடு செய்திகள்

நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

Published On 2023-10-01 04:30 IST   |   Update On 2023-10-01 04:30:00 IST
  • மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.
  • நாளை சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிறுப்பதாவது:-

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News