தமிழ்நாடு செய்திகள்

எங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவருக்கு புகழஞ்சலிகள்- எடப்பாடி பழனிசாமி டுவீட்

Published On 2022-12-24 09:10 IST   |   Update On 2022-12-24 09:10:00 IST
  • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
  • மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசயல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

அந்த பதிவில், " வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி,

எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி " என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News