தமிழ்நாடு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-07-24 08:23 GMT   |   Update On 2023-07-24 08:23 GMT
  • மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை:

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈவுஇரக்கமற்ற செயலை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News