தமிழ்நாடு
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈவுஇரக்கமற்ற செயலை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.